காரைக்குடி :அரியக்குடியில் பாலம் உடைந்து பல மாதங்களாகியும், செப்பனிடாததால், அரியக்குடி - உஞ்சனை இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. உஞ்சனை ரோட்டில் கழிவு நீர் செல்வதற்காக, சன்னதி தெருவில் தரைப்பாலம் அமைத்தனர். தொடர்மழைக்கு இப்பாலம் சேதமடைந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரியக்குடி ஊராட்சி தலைவர் சிறியமலர் கூறுகையில், ""இந்த ரோட்டின் இரு புறமும் கடை வைத்துள்ளனர். தரைப்பாலம் உடைபட்டுள்ளதால், பஸ் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என்றார்.
No comments:
Post a Comment