Wednesday, January 26, 2011

அரசு மருத்துவமனையில் சாப்பாடு வினியோகம் குறைவு

காரைக்குடி :காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஒதுக்கீடு படி உணவு வழங்காததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு 80 உள்நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தினமும் காலையில் இட்லி, பால், வாழைபழம், மதியம் சாப்பாடு, இரவு உப்புமா வழங்கப்படுகிறது. இங்கு, ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் அளவிற்கேற்ப உணவு வழங்குவதில்லை. குறைவாக வழங்குவதால், உணவு பற்றாக்குறையில் நோயாளிகள் தவிக்கின்றனர். நோயாளி ஒருவர் கூறுகையில், ""இரவு ஒரு கரண்டி உப்புமா தான் தருகின்றனர். இது பற்றாக்குறையாக உள்ளது. காலை முட்டை தரவேண்டும். ஆனால், வாழைபழம் தருகின்றனர். சுண்டல் உள்ளிட்ட உணவுகளை குறைவாக தருகின்றனர்,'' என்றார்.

No comments:

Post a Comment