Wednesday, January 26, 2011

மனைவி கொலை கணவர் கைது

கல்லல் :கல்லலில் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பொய்யலூரை சேர்ந்த ராஜூ மகள் உஷா(26). சின்னநாச்சியாபுரத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மருதுபாண்டி (31). இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். மலர்விழி (5), மகாலட்சுமி (3) மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு 2 தினங்களுக்கு முன், தனது தந்தை வீடு உள்ள பொய்யலூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம், அங்கு சென்ற மருதுபாண்டி, மனைவியை வீட்டிற்கு அழைத்தார். அவர் வர மறுத்துவிட்டார். இந்த கோபத்தில் திரும்பி சென்றவர் நேற்று அதிகாலை 5.50 மணிக்கு பொய்யலூரில் உள்ள மனைவி வீட்டிற்கு அரிவாளுடன் சென்றார். வீட்டில் இருந்த மனைவியின் கழுத்தில் வெட்டி கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் நேதாஜி, மனைவியை கொன்றவரை கைது செய்தார்.

No comments:

Post a Comment