Wednesday, January 26, 2011

அழகப்பா கல்லூரியில்பட்டயப் படிப்பு துவக்கம்

காரைக்குடி:""காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் விவசாயம் சார்ந்த பட்டய படிப்பு துவக்கப்பட்டுள்ளது,'' என தாவரவியல் துறை தலைவர் அருண்குமார் கூறினார்.அவர் கூறியது, ""இக்கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பு மட்டுமின்றி சுயவேலைவாய்ப்பு பெறும் படிப்புகள் இங்கு துவக்க முடிவு செய்யப்பட்டது. பி.எஸ்சி., மாணவர்கள் கூடுதலாக இயற்கை விவசாய நுட்பங்கள் குறித்த பட்டய வகுப்பில் சேரலாம். அறிவியல் துறை மட்டுமின்றி, பிற துறை மாணவர்களும் சேரலாம். 
மண்ணின் தன்மை மதிப்பிடுதல், தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், உயிர் பூச்சிக் கொல்லி (பயோ பெஸ்டிசைடு) தயாரித்தல், காளான் வளர்ப்பு குறித்து கற்றுத்தரப்படும். இதற்கான கல்வி கட்டணம் 123 ரூபாய் மட்டுமே,'' என்றார்.

No comments:

Post a Comment