மானாமதுரை:கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை, வங்கிகள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகளவு கல்விக்கடன் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டால், புது காரணங்களை தேடிக்கண்டுபிடித்து அலைக்கழிக்கின்றனர்.
பல ஆவணங்களை கொடுக்குமாறு கூறுகின்றனர். மாணவர்கள் வங்கிக்கு நடையாய் நடப்பதால் கல்வி பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து மானாமதுரையை சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை குமார் கூறுகையில், ""விண்ணப்பம் வாங்கியதில் இருந்து, தினமும் ஒரு வங்கியில் கையெழுத்து வாங்கி வருமாறு கூறுகின்றனர். தற்போது, நோட்டரி பப்ளிக் சான்று வாங்கி வருமாறு, நிபந்தனை விதிக்கின்றனர். இதனால் கல்வி பாதிக்கிறது. அரசியல்வாதிகள், புரோக்கர்கள் பரிந்துரைத்தால் தாமதமின்றி கிடைக்கிறது,'' என்றார்.
பல ஆவணங்களை கொடுக்குமாறு கூறுகின்றனர். மாணவர்கள் வங்கிக்கு நடையாய் நடப்பதால் கல்வி பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து மானாமதுரையை சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை குமார் கூறுகையில், ""விண்ணப்பம் வாங்கியதில் இருந்து, தினமும் ஒரு வங்கியில் கையெழுத்து வாங்கி வருமாறு கூறுகின்றனர். தற்போது, நோட்டரி பப்ளிக் சான்று வாங்கி வருமாறு, நிபந்தனை விதிக்கின்றனர். இதனால் கல்வி பாதிக்கிறது. அரசியல்வாதிகள், புரோக்கர்கள் பரிந்துரைத்தால் தாமதமின்றி கிடைக்கிறது,'' என்றார்.
No comments:
Post a Comment